Monday, March 31, 2008

திருப்புமுனைகள் 2008..

லிம் கிட் சியாங் "இசா" சட்டத்தில் கைதான ஐவரையும் விடுவிக்க கோரியுள்ளார். ஆனால் மக்களின் சேவை மகேசன் சேவை என்று பழைய பாட்டைப்பாடும் படாவி அரசாங்கம் இந்த மக்கள் சக்தி வீரர்களின் விடுதலை பற்றி செவிசைக்கவே இல்லை எனலாம்..

பெர்லிஸ் மற்றும் திரங்கானு மாநில மந்திரி பெசார் நியமனத்திலும் நடப்பு அரசாங்கத்தின் பரிந்துரையை மாநில சுல்தான்கள் நீராகரித்தனர்; நல்ல முடிவு!! பாரிசன் கூட்டணிக்கு மற்றுமொரு வெட்கக்கேடு..

டத்தோ சாமி இனிமேல் பகாங் மாநில அரசாங்கத்திடம் இந்திய பிரதிநிதிகள் குறித்து பிச்சை எடுக்க மாட்டாராம்..ஆனால் இவர் எதிர்கட்சியில் இந்திய பிரதிநிதிகள் குறைவு என்று விமர்சிக்கிறார்.
ஐயா சாமி.. நீங்க பிச்சை எடுக்க வேண்டாம்..நமக்கு வேண்டியதை உரிமையோடு கேட்டு வாங்குங்க!!! நம்மளும் இந்த புண்ணிய பூமிக்கு சொந்தகரந்தன்..ஐ மீன் வி அல்சோ நாட்டான்..நாட் காட்டன்!!!

ஐயா சாமி.. தைப்பிங், கம்போங் ஜெபோங் மஇகா கிளையைச் சேர்ந்த 110 உறுப்பினர்கள் கிளையை மூடிவிட்டு பாஸ் ஆதரவாளர்கள் கிளப்பில் சேர்ந்துவிட்டனராம்.. உங்களுக்கு தெரியுமா..?? நமது இந்தியர்களின் நலனை சீக்கிரம் கவனிங்க.. அதுவும் இளையவர்களின மீது் இன்னும் கவனம் செலுத்துவும்.. ஏன் என்றால்..இவர்கள்தான் கட்சின் மற்றும் நாட்டின் எதிர்க்காலத்தை நிர்யினப்வர்கள்.. இல்லாவிட்டால் உங்கள் கட்சி உறுப்பினர்கள் விரைவில் "மக்கள் சக்தி" கட்சி பக்கம் இருந்தால் ஆச்சிரியப்பட வேண்டாம்!!

14/04/2008-இல் மற்றும் 07/05/2008-இல் திருப்புமுனைகள் நிறைய நடக்கும் என கேள்விப்படுகிறேன்.. நடந்தால் மக்களுக்கும் சந்தோஷம்தான்!!

நாட்டில் நல்லது நிறைய இப்பொழுது நடக்கிறது..அதுவும் மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ்!! பாரிசன் கூட்டணி கட்சிகள் தங்களது சொந்தப் பிரச்சனைகளை முடிக்கவே நேரம் இல்லை.. நாட்டில் மக்களுக்கு நல்லதும் சுபிட்சமும் நிறைந்து இருந்தால் அதுவே போதும்!!!

முற்றும்..ஆனால் இது தொடக்கம் தான்.. :-) This is never ending mission..