Sunday, March 15, 2009

ஓம் நமசிவாய!!

கடந்த புதன்கிழமை (11/03/2009) என் அலுவலக தோழர்களுடன் காற்பந்து விளையாடிய பிரகாஷ் என்ற தோழர் விளையாடும்போதே விழுந்து மரணமுற்றார். அந்த நிகழ்வு நான்/நாங்கள் எதிர்ப்பார்க்காத ஒன்று!! கடந்த வாரம்தான் ஒரு தோழி "வெண்ணிலா கபடி குழு" என்ற தமிழ் படத்தை பார்த்துவிட்டு விளையாடும்போது எப்படி ஒருவர் இறக்க முடியும் என்று ஐயம் எழுப்பினாள். ஆனால் இந்த மாதிரியான ஒரு துயரச் சம்பவம் என்னை சுற்றி நடக்குமென நான் எதிர்ப்பார்க்கவில்லை. ஒவ்வொரு வாரமும் காற்பந்து விளையாடும் நான் ஏனோ தெரியவில்லை கடந்த புதன்கிழமை விளையாட போகவில்லை..விளையாடும் எண்ணம் இல்லை என்றே சொல்லவேண்டும்!!! நண்பர் பிரகாஷ் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வாழ்வா இறைவனை வேண்டுகிறேன்! ஓம் நமசிவாய!!